Friday, June 25, 2010

உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை

1.உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான கரத்துக்கொப்புவி ;
விண்மனை ஆண்டிருக்கும் மகா தயாபரர்
உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார்.


2.ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளை போல்
நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள்.
உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது;
வேண்டாம் ,ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு .

3.ஏழை அடியாருக்கு பிதாவாம் தேவரீர்
இன்னின தெங்களுக்கு வேண்டும் என்றறிவீர் ;
நீர் எதை நல்லதாக கண்டீரோ , அதை நீர்
உம் வேளை பலமாக வர விடுகிறீர் .

4.பல வழிவகையும் உம்மாலே ஏற்படும் ;
நீர் செய்வது இசையும் , நீர் சொன்னது வரும்;
நீர் வாக்குத்தத்தமாக பொழிந்தவை எல்லாம்
உம்மாலே திட்டமாக நற்காலத்தில் உண்டாம்.

5.இக்கட்டுகளினாலே கலங்கினோனே , நீ
திடன் கொள் ,கர்த்தராலே இக்கட்டான ராத்திரி
சந்தோஷமாக மாறும் ,சற்றே பொறுத்திரு ;
நீ பூரிப்பாய் கொண்டாடும் நாள் வரப்போகுது .

5.உன் கவலைகளுக்கு இன்றே விடை கொடு;
இனிவிசாரத்துக்கு இடங்கொடாதிரு ;
நீ ஆளும் தெய்வமல்ல , நீ பூச்சி யென்றறி;
சருவத்திற்கும் வல்ல கர்த்தர் அதிபதி .

6.நீ பக்தியை விடாமல் பொறுத்திருக்கையில்
கர்த்தர் நீ நினையாமல் இருக்கும் நேரத்தில்
உன் துக்கத்தை அகற்ற வெளிச்சம் காண்பிப்பார் ;
நீ நன்மைக்காகப் பட்ட சலிப்பை நீக்குவார் .

7.அட்சணமே பலத்த ஜெயமும் பூரிப்பும்
ஆசிர்வதிக்கப்பட்ட தெய்வீகத் தேற்றலும்
அடைந்து இன்பமான மன மகிழ்ச்சியாய்
அன்புள்ள மீட்பரான கர்த்தாவைப் பாடுவாய் .

8.கர்த்தாவே, எங்களுக்கு எல்லா இக்கட்டிலும்
ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும் ;
ஆ, எங்களைத் தேற்றிடும்;பரகதிக்குப் போம் ,
வழியிலும் நடத்தும் , அப்போ பிழைக்கிறோம் .

No comments:

Post a Comment