Tuesday, June 1, 2010

பிதா சுதன் ஆவியே

1.பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே ,
கேளும் நெஞ்சின் வேண்டலை ,
தாரும் சமாதானத்தை ;
அன்புக்கேற்ற உணர்வும்
அன்னியோன்னிய ஐக்கியமும்
ஈந்து ஆசிர்வதியும் ,
திவ்ய நேசம் ஊற்றிடும்

2.உந்தன் அடியாரை, நீர்
ஒரே மந்தையாக்குவீர் ;
விசுவாசமும் ஒன்றே ;
ஒன்றே எங்கள் நம்பிக்கை ;
ஐக்கியமாக்கி எங்களை
ஆண்டு கொள்ளும் கர்த்தரே ,
ஏக சிந்தை தாருமே.

3.மீட்டுக் கொண்ட ஆண்டவா ,
அன்னியோன்னிய காரணா
ஜீவ நேசா ,தேவரீர்
வேண்டல் கேட்டிரங்குவீர்;
பிதா சுதன் ஆவியே,
ஏகரான ஸ்வாமியே ,
உந்தன் திவ்விய ஐக்கியமும்
தந்து ஆட்கொண்டருளும் .

No comments:

Post a Comment