1.நான் பாவி தான் ,- ஆனாலும் நீர்
மாசற்ற ரத்தம் சிந்தினீர்;
'வா' என்று என்னை அழைத்தீர் ;
என் மீட்பரே வந்தேன் .
2.நான் பாவி தான் -என் நெஞ்சிலே
கறை பிடித்து கெட்டேனே ;
என் கறை நீங்க இப்போதே ,
என் மீட்பரே வந்தேன் .
3.நான் பாவி தான்- மா பயத்தால்
திகைத்து பாவ பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வந்தேன் .
4.நான் பாவி தான் ,- மெய்யாயினும்
சீர், நேர்மை , செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே வந்தேன் .
5. நான் பாவி தான் ,-இரங்குவீர் ,
அணைத்து, காத்து , ரட்சிப்பீர் ,
அருளாம் செல்வம் அளிப்பீர் ,
என் மீட்பரே வந்தேன் .
6.நான் பாவி தான் -அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர் ;
உமக்கு சொந்தம் ஆக்கினீர் ;
என் மீட்பரே வந்தேன் .
மாண்டு
No comments:
Post a Comment