1.அநாதியான கர்த்தரே ,
தெய்வீக ஆசனத்திலே
வானக்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர்.
2. பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
சாஷ்டாங்கமாயப் பணிவார் ,
நீர் தூய தூயர் எண்ணுவார் .
அப்படியானால் , தூசியும்
சாம்பலுமான நாங்களும்
எவ்வாறு உம்மை அண்டுவோம் ?
எவ்விதமாய் ஆராதிப்போம் ?
நீரோ உயர்ந்த வானத்தில் ,
நாங்களோ தாழ்ந்த பூமியில்
இருப்பதால் , வணங்குவோம் ,
மா பயத்தோடு சேருவோம்
No comments:
Post a Comment