Monday, September 13, 2010

என்னோடிரும் மா நேசக் கர்த்தரே

1.என்னோடிரும் மா நேசக் கர்த்தரே ,

வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே ;

மற்றோர் சகாயம் அற்ற போதிலும்,

நீங்கா ஒத்தாசை நீரே என்னோடிரும்.

2.நீர் மேல் குமிழி போல் என் ஆயுசும் ,

இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்

கண் கண்ட யாவும் மாறி வாடிடும் ;

மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும் .

3.நியாயம் தீர்ப்போராக என்னண்டை

வராமல் , சாந்தம் தயை கிருபை

நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்

நீர் பாவி நேசரே என்னோடிரும் .

4.நீர் கூட நின்று அருள் புரியும் ;

பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்

என் துணை நீர் ,என் தஞ்சமாயிரும் ;

இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும் .

5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;

நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன் ;

சாவே, எங்கே என் கூரும் ஜெயமும் ?

நான் உம்மை வெல்ல நீர் என்னோடிரும் .

6.நான் சாகும் அந்தகார நேரத்தில்

உம் சிலுவையைக் காட்டும் ; சாகையில்

விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும் ;

வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்

Saturday, July 3, 2010

ஆராய்ந்து பாரும் ,கர்த்தரே

ஆராய்ந்து பாரும், கர்த்தரே ,
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும் .

ஆராயும் எந்தன் உள்ளத்தை
நீர் சோதித்தறிவீர் ;
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்.

ஆராயும் சுடரொளியால்
தூராசை தோன்றவும் ;
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும் .

ஆராயும் சிந்தை, யோசனை
எவ்வகை நோக்கமும் ,
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்.

ஆராயும் மறைவிடத்தை
உமா தூய கண்ணினால் ;
ஆரோசிப்பேன் என் பாவத்தை
உம பேரருளினால் .

இவ்வாறு நீர் ஆராய்கையில்
சாஷ்டாங்கம் பண்ணுவேன் ;
உம சரணார விந்ததில்
பணிந்து போற்றுவேன்

Friday, June 25, 2010

உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை

1.உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான கரத்துக்கொப்புவி ;
விண்மனை ஆண்டிருக்கும் மகா தயாபரர்
உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார்.


2.ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளை போல்
நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள்.
உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது;
வேண்டாம் ,ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு .

3.ஏழை அடியாருக்கு பிதாவாம் தேவரீர்
இன்னின தெங்களுக்கு வேண்டும் என்றறிவீர் ;
நீர் எதை நல்லதாக கண்டீரோ , அதை நீர்
உம் வேளை பலமாக வர விடுகிறீர் .

4.பல வழிவகையும் உம்மாலே ஏற்படும் ;
நீர் செய்வது இசையும் , நீர் சொன்னது வரும்;
நீர் வாக்குத்தத்தமாக பொழிந்தவை எல்லாம்
உம்மாலே திட்டமாக நற்காலத்தில் உண்டாம்.

5.இக்கட்டுகளினாலே கலங்கினோனே , நீ
திடன் கொள் ,கர்த்தராலே இக்கட்டான ராத்திரி
சந்தோஷமாக மாறும் ,சற்றே பொறுத்திரு ;
நீ பூரிப்பாய் கொண்டாடும் நாள் வரப்போகுது .

5.உன் கவலைகளுக்கு இன்றே விடை கொடு;
இனிவிசாரத்துக்கு இடங்கொடாதிரு ;
நீ ஆளும் தெய்வமல்ல , நீ பூச்சி யென்றறி;
சருவத்திற்கும் வல்ல கர்த்தர் அதிபதி .

6.நீ பக்தியை விடாமல் பொறுத்திருக்கையில்
கர்த்தர் நீ நினையாமல் இருக்கும் நேரத்தில்
உன் துக்கத்தை அகற்ற வெளிச்சம் காண்பிப்பார் ;
நீ நன்மைக்காகப் பட்ட சலிப்பை நீக்குவார் .

7.அட்சணமே பலத்த ஜெயமும் பூரிப்பும்
ஆசிர்வதிக்கப்பட்ட தெய்வீகத் தேற்றலும்
அடைந்து இன்பமான மன மகிழ்ச்சியாய்
அன்புள்ள மீட்பரான கர்த்தாவைப் பாடுவாய் .

8.கர்த்தாவே, எங்களுக்கு எல்லா இக்கட்டிலும்
ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும் ;
ஆ, எங்களைத் தேற்றிடும்;பரகதிக்குப் போம் ,
வழியிலும் நடத்தும் , அப்போ பிழைக்கிறோம் .

இயேசு நாதா காக்கிறீர்

1.இயேசு நாதா! காக்கிறீர் ,
இளைப்பாறச் செய்கிறீர் ,
மோசம் நேரிடாமலும் ,
பாதம் இடறாமலும்,
என்னைத் தாங்கி நிற்கிறீர் ;
நேச நாதா காக்கிறீர்.

2.வாரிபோன்ற லோகத்தில்
யாத்திரை செய்து போகையில் ,
சூறைக்காற்று மோதினும் ,
ஆழி கோஷ்டமாயினும்,
அமைதல் உண்டாக்குவீர் !
நேச நாதா காக்கிறீர் !

3.சற்று தூரம் செல்லவே ,
மோட்ச கரை தோன்றுமே !
துன்பம் நீங்கி வாழுவேன் ;
இன்பம் பெற்று போற்றுவேன் ;
அதுமட்டும் தாங்குவீர் ;
நேச நாதா காக்கிறீர் .

அன்போடு எம்மைப் போஷிக்கும்

1.அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே ;
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்ட இவ்வாழ்விலே .

2.கிருபாசன்முன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும் ;
தலைமுறையாத் தேவரீர்
எம் தெய்வமாயிரும் .

3.மயங்கும் ஜீவா பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும் ;
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும் .

4.இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாருமளவும்
காப்பீர் உம் மறைவில் .

5.சிலுவை சுமந்தோராக
அவரைப் பின்பற்றுவோம் ;
தீரங்கொண்டு வீரராக
துன்பம் நிந்தை சகிப்போம்.

6.நேசர் தயவாய் நம்மோடு
சொல்லும் ஒரு வார்த்தையே ,
துக்கத்தை எல்லாம் கட்டோடு
நீங்கிப்போகச் செய்யுமே .

7.சாகும்பொது, திறவுண்ட
வானத்தையும் , அதிலே
மகிமையினால் சூழுண்ட
இயேசுவையும் காண்போமே .

8.வாழ்க, சிலுவையே ! வாழ்க
மோட்சத்தின் முன் தூதனே !
நீதிமான்கள் இளைப்பாற
நேர் வழியாம் வாசலே!

Wednesday, June 23, 2010

நான் பாவி தான் -ஆனாலும் நீர்

1.நான் பாவி தான் ,- ஆனாலும் நீர்
மாசற்ற ரத்தம் சிந்தினீர்;
'வா' என்று என்னை அழைத்தீர் ;
என் மீட்பரே வந்தேன் .

2.நான் பாவி தான் -என் நெஞ்சிலே
கறை பிடித்து கெட்டேனே ;
என் கறை நீங்க இப்போதே ,
என் மீட்பரே வந்தேன் .

3.நான் பாவி தான்- மா பயத்தால்
திகைத்து பாவ பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வந்தேன் .

4.நான் பாவி தான் ,- மெய்யாயினும்
சீர், நேர்மை , செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே வந்தேன் .

5. நான் பாவி தான் ,-இரங்குவீர் ,
அணைத்து, காத்து , ரட்சிப்பீர் ,
அருளாம் செல்வம் அளிப்பீர் ,
என் மீட்பரே வந்தேன் .

6.நான் பாவி தான் -அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர் ;
உமக்கு சொந்தம் ஆக்கினீர் ;
என் மீட்பரே வந்தேன் .
மாண்டு

Saturday, June 5, 2010

களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே

1.களிகூருவோம் ,கர்த்தர் நம் பட்சமே ;தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே ,எப்பாவம் பயம் நீக்குவார் ,
கர்த்தர் நம் பட்சம் கர்த்தர் நம்மோடு கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர் ?
யார் எதிர்க்க வல்லோர் ? யார் வல்லோர்?

2.திடனடைவோம் , தீமை மேற்கொள்ளுவோம்
கர்த்தாவின் வல்ல கரத்தால் !
உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம் ,
அவரே திடன் ஆகையால் .

3.வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய்
கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே ;
பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய்
நிலைக்கும் , இது மெய் மெய்யே

4. நிலைத்திருப்போம் ,கர்த்தரின் கட்டினில்,
அதால் நித்திய ஜீவன் உண்டாம் ;
பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்
வைத்தென்றும் பாதுகாப்பாராம்

பிளவுண்ட மலையே புகலிடம் இதுவே

1.பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும் ,பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.

எந்த கிரியை செய்துமே, உந்தன் நீதி கிட்டாதே
கண்ணிர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும் ,
பாவம் நீங்க மாட்டாதே ;நீரே மீட்பர் இயேசுவே.

யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் நான் ;
உம சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே ;
தூய ஊற்றை அண்டினேன் .தூய்மையாக்கேல் மாளுவேன் .

நிழல் போன்ற வாழ்விலே , கண்ணை மூடும் சாவிலே ,
கண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில் ,
பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே

தெய்வ ஆட்டுக்குட்டியே லோகத்தாரின்

1.தெய்வ ஆட்டுக்குட்டியே ,
லோகத்தாரின் மீட்பரே ,
உம்மால் மீட்கப்பட்ட நான்
தேவரீர்க்கு அடியான்;
நீர் என் கோட்டை தஞ்சமாம் ,
ஆர் என் வாழ்வை நீக்கலாம்?

2.உம்மைப் பற்றும் நேசத்தை ,
உம்மில் வைக்கும் பக்தியை
பேயும், கெட்ட லோகமும்
மூர்க்கமாய் விரோதிக்கும் ;
இன்பம் துன்பம் நித்தமே
கன்னியாக நிற்குமே .

3.கர்த்தரே , என் உள்ளத்தில்
அருள் தந்தென் மனதில்
அந்தகாரம் நீங்கிட ,
அன்பின் தீபம் ஸ்வாலிக்க,
ஆவியின் நல ஈவையும்
பூர்த்தியாக அளியும்.

4.எந்த நாழிகையிலே
நீர் வந்தாலும், இயேசுவே,
உம்மையே நான் சந்திக்க
கண்ணால் கண்டு களிக்க,
நான் விழித்திருக்கவே
நித்தம் ஏவியருளும்

என் மீட்பர் ரத்தம் சிந்தினார்

1.என் மீட்பர் ரத்தம் சிந்தினார் ;
மா நீதியும் சம்பாதித்தார்;
என் சொந்த நீதி வெறுத்தேன் ;
இயேசுவின் நாமம் நம்புவேன் ;
நான் நிற்கும் பாதை கிறிஸ்து தான்
வேறஸ்திபாரம் மணல் தான் .

2.கார் மேகம் அவர் முகத்தை
மறைக்கும் காலம், அவரை
எப்போதும்போல நம்புவேன் ,
மாறாதவர் என்றறிவேன் ;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான் ,
வேறஸ்திபாரம் மணல் தான் .

3.மரண வெள்ளம் பொங்கினும்
என் மாம்சம் சோர்ந்து போயினும்
உன் வாக்குத்தத்தம் ஆணையும்
என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்
நன் நிற்கும்பாறை கிறிஸ்து தான் ,
வேறஸ்திபாரம் மணல் தான் .

4.நியாயத்தீர்ப்புக் காலத்தில்
எக்காள சத்தம் கேட்கையில்,
அஞ்சேன் என் மீட்பர் நீதியே
அநீதன் என்னை மூடுமே ;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்
வேறஸ்திபாரம் மணல் தான்

Wednesday, June 2, 2010

தூய தூய தூயா! சர்வ வல்ல நாதா

1.தூய, தூய , தூயா! சர்வ வல்ல நாதா !
தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே ;
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே !

2.தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று
தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே ,
கேருபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று ,
இன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே !

3.தூய, தூய, தூயா ! ஜோதி பிரகாசா
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர் ?
நீரே தூய தூயர் , மனோவாக்குக் கெட்டா
மாட்சிமை ,தூய்மை ,அன்பும் நிறைந்தோர் .

4. தூய, தூய, தூயா! சர்வ வல்ல நாதா !
வானம் பூமி ஆழி உம்மை ஸ்தோத்தரிக்குமே;
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே , தூய திரியேகரே!

எவ்வண்ணமாக கர்த்தரே

1.எவ்வண்ணமாக, கர்த்தரே,
உம்மை வணங்குவேன் ?
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென தருவேன் ?

2.அநேக காணிக்கைகளால்
உம கோபம் மாறுமோ ?
நான் புண்ணிய கிரியை செய்வதால்
கடாட்சம் வைப்பிரோ ?

3. பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும் , பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே.

4. நான் குற்றவாளி , ஆகையால்
என்பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அளித்தால் நியாயமே .

5.ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்;
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்.

6.இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார் ;
உம திவ்விய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார் .

7.இவ்வண்ணமாக கர்த்தரே ,
உம்மை வணங்குவேன்
என் நீதி இயேசுகிறிஸ்துவே ,
அவரைப் பற்றினேன்

எங்கும் நிறைந்த தெய்வமே

1.எங்கும் நிறைந்த தெய்வமே
ஏழை அடியார் பணிவாய்
துங்கவன் உந்தன் பாதமே
ஸ்தோத்தரிக்கின்றோம் ஏகமாய் .

2.உலக எண்ணம் நீங்கியே
உந்தனில் திட மனதாய்
நலமாய் உள்ளம் பொங்கியே
நாடித் துதிக்கச் செய் அன்பாய் .

3.கேட்டிடும் தெய்வ வாக்கியம்
கிருபையாய் மனதிலே
நாட்டிட நின் சலாக்கியம்
நாங்கள் நிறையச் செயகாலே .

தூதர்கள் கூடிப் பாடிடும்
தூயர் உம்மை மா பாவிகள்
பாதம் பணிந்து வேண்டினோம்
பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள் .

இயேசு ஸ்வாமி ,உமது வசனத்தின்

1.இயேசு ஸ்வாமி,உமது
வசனத்தின் பாலைத் தேட
வந்தோம்; எங்கள் மனது
மண்ணைவிட்டு உம்மைச் சேர
எங்கள் சிந்தையை நீர் முற்றும்
தெய்வ சொல்லுக்குட்படுத்தும் .

2.உமதாவி யெங்களில்
அந்தகாரத்தை அறுத்து
ஒளியை வீசிராகில்,
புத்திக் கண்ணெல்லாம் இருட்டு ;
சீர் உண்டாக்கும் நற்சிந்திப்பு
உம்முடைய நடப்பிப்பு .

3. மகிமையின் ஜோதியே ,
ஸ்வாமி , நாங்கள் மாயமற
பாடிக் கெஞ்சி , நெஞ்சிலே
வசனத்தைக் கேட்டுணர
வாய் செவி மனமும் கண்ணும்
திரவுண்டுபோகப் பண்ணும்.

அலங்கார வாசலாலே

1.அலங்கார வாசளாலே
கோவிலுக்குள் போகிறேன் ;
தெய்வ வீட்டின் நன்மையாலே
ஆத்துமத்தில் பூரிப்பேன் ;
இங்கே தெய்வ சமுகம் ,
மெய் வெளிச்சம் , பாக்கியம்

2.கர்த்தரே ,உம்மண்டை வந்த
என்னண்டைக்கு வாருமேன் ,
நீர் இறங்கும்போதானந்த
இன்பத்தால் மகிழுவேன் ,
என்னுட இதயமும்
தெய்வ ஸ்தலமாகவும்.


3. பயத்தில் உம்மண்டை சேர,
என் ஜெபம் புகழ்ச்சியும்
நல்ல பலியாக ஏற
உமதாவியைக் கொடும்.
தேகம் ஆவி யாவையும்
சுத்தமாக்கியருளும்.

4. நல்ல நிலத்தில் விழுந்த
விதை பயிராகுமே ;
நானும் அவ்வாறே மிகுந்த
கனிகளைத் தரவே ,
வசனத்தைக் காக்க நீர்
ஈவளிக்கக் கடவீர் .

5.விசுவாசத்தை விடாமல்
அதில் பலப்படவும் ,
ஒருக்காலும் தவறாமல்
உம்மை நான் பின்செல்லவும்,
மெய் வெளிச்சத்தை நீரே
என்னில் வீசும் கர்த்தரே .

5. சொல்லும் , கர்த்தரே, நான் கேட்பேன்
நீர்இப்பாழ் நிலத்திலே
பெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன்
நல்தியானத்துடனே ;
தாரும் ஜீவ பானத்தை,
தீரும் பசிதாகத்தை

ஆ கர்த்தாவே தாழ்மையாக

1.ஆ கர்த்தாவே , தாழ்மையாக

திருப்பாதத்ண்டையே

தெண்டனிட ஆவலாக

வந்தேன், நல்ல இயேசுவே;

உம்மை தேடி

தரிசிக்கவே வந்தேன்.

2. வல்ல கர்த்தாவினுடைய

தூய ஆட்டுக்குட்டியே ,

நீரே என்றும் என்னுடைய

ஞான மணவாளனே ;

உம்மை தேடி

தரிசிக்கவே வந்தேன் .

3.என் பிரார்த்தனையைக் கேளும்,

அத்தியந்த பணிவாய்

கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்

உம்முடைய பிள்ளையாய்

உம்மை தேடி தரிசிக்கவே வந்தேன்

1.அநாதியான கர்த்தரே ,

தெய்வீக ஆசனத்திலே

வானக்களுக்கு மேலாய் நீர்

மகிமையோடிருக்கிறீர்.

2. பிரதான தூதர் உம்முன்னே

தம் முகம் பாதம் மூடியே

சாஷ்டாங்கமாயப் பணிவார் ,

நீர் தூய தூயர் எண்ணுவார் .

அப்படியானால் , தூசியும்

சாம்பலுமான நாங்களும்

எவ்வாறு உம்மை அண்டுவோம் ?

எவ்விதமாய் ஆராதிப்போம் ?

நீரோ உயர்ந்த வானத்தில் ,

நாங்களோ தாழ்ந்த பூமியில்

இருப்பதால் , வணங்குவோம் ,

மா பயத்தோடு சேருவோம்

Tuesday, June 1, 2010

பிதா சுதன் ஆவியே

1.பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே ,
கேளும் நெஞ்சின் வேண்டலை ,
தாரும் சமாதானத்தை ;
அன்புக்கேற்ற உணர்வும்
அன்னியோன்னிய ஐக்கியமும்
ஈந்து ஆசிர்வதியும் ,
திவ்ய நேசம் ஊற்றிடும்

2.உந்தன் அடியாரை, நீர்
ஒரே மந்தையாக்குவீர் ;
விசுவாசமும் ஒன்றே ;
ஒன்றே எங்கள் நம்பிக்கை ;
ஐக்கியமாக்கி எங்களை
ஆண்டு கொள்ளும் கர்த்தரே ,
ஏக சிந்தை தாருமே.

3.மீட்டுக் கொண்ட ஆண்டவா ,
அன்னியோன்னிய காரணா
ஜீவ நேசா ,தேவரீர்
வேண்டல் கேட்டிரங்குவீர்;
பிதா சுதன் ஆவியே,
ஏகரான ஸ்வாமியே ,
உந்தன் திவ்விய ஐக்கியமும்
தந்து ஆட்கொண்டருளும் .

Monday, May 31, 2010

அஞ்சாதிரு என் நெஞ்சமே பாமாலை 328

1.அஞ்சாதிரு ,என் நெஞ்சமே ,
உன் கர்த்தர் துன்ப நாளிலே
கண் பார்ப்போம் என்கிறார் ;
இக்கட்டில் திகையாதிரு ,
தகுந்த துணை உனக்கு
தப்பாமல் செய்குவார்.

2. தாவீதும் யோபும் யோசேப்பும்
அநேக நீதிமான்களும்
உன்னிலும் வெகுவாய் .
கசதி அடைந்தும் ,பக்தியில்
வேரூன்றி ஏற்ற வேளையில்
வாழ்ந்தார்கள் பூர்த்தியாய் .

3.கருத்தாய் தெய்வ தயவை
எப்போ தும் நம்பும் பிள்ளையை
சகாயர் மறவார் ;
மேயபக்தி உன்னில் வேர்கொண்டால்
இரக்கமான கரத்தால்
அணைத்து பாலிப்பார் .

4.என் நெஞ்சமே ,மகிழ்ந்திரு
பேய் ,லோகம், துன்பம் உனக்கு
பொல்லாப்புச் செய்யாதே ;
இம்மானுவேல் உன் கன்மலை ,
அவர் மேல் வைத்த நம்பிக்கை
அபத்தம் ஆகாதே.

Thursday, May 27, 2010

காரிருளில் என் நேச தீபமே பாமாலை 323

1.காரிருளில் என் நேச தீபமே ,நடத்துமேன் ;
வேறொளியில்லை, வீடும் தூரமே நடத்துமேன் ;
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்
ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன் .


2.என் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ !முன்னாளிலே ;
ஒத்தாசை தேடவில்லை ;இப்போதோ நடத்துமே
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன் , அன்பாக மன்னியும் .

3.இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்; இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும் ;
உதய நேரம் வர களிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்

பாதை காட்டும் மா யெகோவா பாமாலை 324

1.பாதை காட்டும் மா யெகோவா,

பரதேசியான நான்

பலவீனன், அறிவீனன் ,

இவ்வுலோகம் காடு தான்,

வானாகரம்

தந்து என்னைப் போஷியும்.



2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை

நீர் திறந்து தாருமேன் ;

தீப மேக ஸ்தம்பம் காட்டும்.

வழியில் நடத்துமேன் ;

வல்ல மீட்பர் !

என்னைத் தாங்கும், இயேசுவே.



3.சாவின் அந்தகாரம் வந்து

என்னை மூடும் நேரத்தில்

சாவின் மேலும் வெற்றித் தந்து ,

என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ;

கீத வாழ்த்தல்

உமக்கென்றும் பாடுவேன் .



Wednesday, May 26, 2010

கர்த்தாவை நல்ல பக்தியாலே பாமாலை 322

1.கர்த்தாவை நல்ல பக்தியாலே

எப்போதும் நம்பும் நீதிமான்

எத்தீங்கிலும் அவராலே

அன்பைக் காப்பற்றப்படுவான் ;

உன்னதமான கர்த்தரை

சார்ந்தோர்க்கவர் கன்மலை .

2.அழுத்தும் கவலைகளாலே

பலன் ஏதாகிலும் உண்டோ?

நாம் நித்தம் சஞ்சலத்தினாலே

தவிப்பது உதவுமோ ?

விசாரத்தாலே நமக்கு

இக்கட்டதிகரிக்கது .

3.உன் காரியத்தை நலமாக

திருப்ப வல்லவர்க்கு

நீ அதை ஒப்புவிப்பாயாக ;

விசாரிப்பார் ,அமர்ந்திரு ,

மா திட்டமாய்த் தயாபரர்

உன் தாழ்ச்சியை அறிந்தவர் .

4.சந்தோஷிப்பிக்கிறதான

நாள் எதென்றவர் அறிவார் ;

அநேக நற்குணங்கள் காண

அந்தந்த வேளை தண்டிப்பார் ,

தீவிரமாய்த் திரும்பவும்

தெய்வன்பு பூரிப்பைத் தரும் .

4.நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்

என்றாபத்தில் நினையாதே ;

எப்போதும் பாடும் நோவுமற்றோன்

பிரிய னென்றும் எண்ணாதே ;

அநேக காரியத்துக்கு

பின் மாறுதல் உண்டாகுது .

5.கதியுள்ளோனை ஏழையாக்கி

மகா எளியவனையோ

திரவிய சம்பன்னணாக்கி

உயர்த்த ஸ்வாமிக்கரிதோ ?

தாழ்த்துவார் ,உயர்த்துவார்

அடிக்கிறார் ,அணைக்கிறார் .

7.மன்றாடி பாடி கிரிஸ்தோனாக

நடந்து கொண்டுன் வேலையை

நீ உண்மையோடே செய்வாயாக ;

அப்போ தெய்வாசீர்வாதத்தை

திரும்பக் காண்பாய் ; நீதிமான்

கர்த்தாவால் கைவிடப்படான்

Tuesday, April 13, 2010

நீரோடையை மான் வாஞ்சித்து பாமாலை 375

பாமாலை 375
1 நீரோடையை மான் வாஞ்சித்து

கதறும் வண்ணமாய் ,

என் ஆண்டவா , என் ஆத்துமம்

தவிக்கும் உமக்காய் .

2. தாள கர்த்தா, உமக்காய்

என் உள்ளம் ஏங்காதோ ?

உம மாட்சியுள்ள முகத்தை

எப்போது காண்பேனோ?

3.என் உள்ளமே . விசாரம் ஏன்?

நம்பிக்கை கொண்டு நீ

சதா ஜீவ ஊற்றேயாம்

கர்த்தாவை ஸ்தோத்தரி.

4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா

குமாரன், ஆவிக்கும்,

ஆதி முதல் என்றென்றுமே

துதி உண்டாகவும்.

இயேசு எங்கள் மேய்ப்பர் பாமாலை 237

1.இயேசு எங்கள் மேய்ப்பர் ,
கண்ணீர் துடைப்பார் ;
மார்பில் சேர்த்தணைத்து
பயம் நீக்குவார் ;
துன்பம் நேரிட்டாலும் ,
இன்பம் ஆயினும் .
எசுவின்பின் செல்வோம்
பாளர் யாவரும் .
2. நல்ல மேய்ப்பர் சத்தம்
நன்றாய் அறிவோம் ;
காதுக்கின்பமாக
கேட்டுக் களிப்போம் ;
கண்டித்தாலும், நேசர்
ஆற்றித் தேற்றுவார் ;
நாங்கள் பின்னே செல்ல
வழி காட்டுவார்.

3. ஆட்டுக்காக மேய்ப்பர்
ரத்தம் சிந்தினார்;
அதில் மூழ்கினோரே
தூயர் ஆகுவார்;
பாவ குணம் நீக்கி
முற்றும் ரட்சிப்பார்!
திவ்விய தூய சாயல்
ஆக மாற்றுவார் .

4.இயேசு நல்ல மேய்ப்பர்
ஆட்டைப் போஷிப்பார் !
ஓநாய்கள் வந்தாலும்
தொடவே ஒட்டார் ,
சாவின் பள்ளத்தாக்கில்
அஞ்சவே மாட்டோம் ,
பாதாளத்தின் மேலும்
ஜெயங்கொள்ளுவோம்

என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே பாமாலை 189

1.என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே ;
உம பாதத்தண்டை நிற்கிறேன் ;
திக்கற்ற பிள்ளை கெஞ்சவே ,
தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமென் .

2. என் கிரியைகள் எம்மாத்திரம் ?
பிரயாசை எல்லாம் விருதா '
உம்மாலேயே மெய்ப் பாக்கியம்
உண்டாகும் நேச ரட்சகா .

3. உந்தன் சரீரம் ரத்தமும்
மெய்ப் பொருள் என்று அறிவேன் ;
உட்கொண்டன்பாய் அருந்தவும்,
நன் பரவசமாகுவேன்.

4. மாசற்ற திரு ரத்தத்தைக்
கொண் டென்னைச் சுத்திகரியும் ;
மா திவ்விய ஜீவா அப்பத்தை
என் நெஞ்சில் தந்தருளும் .

5 . என் நாதா, உம ஸரிரமாஎ
மேலான திவ்விய போஜனம்;
மாசற்ற உந்தன் ரத்தமே
மையான பான பாக்கியம்

. உன்னதம், ஆழம், எங்கேயும் பாமாலை 3

பாமாலை
1. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம் ;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்.

2. பாவம் நிறைந்த பூமிக்கு,
இரண்டாம் ஆதாமே,
போரில் சகாயராய் வந்தார்
ஆ, நேச ஞானமே !

3. முதல் ஆதாமின் பாவத்தால்
விழுந்த மாந்தர் தாம்
ஜெயிக்கத் துணையாயினார்;
ஆ ஞான அன்பிதாம் !

4. மானிடர் சுபாவம் மாறவே ,
அருளைப் பார்க்கிலும்
சிறந்த ஏது தாம் என்றே
ஈந்தாரே தம்மையும்

5. மானிடனாய் மானிடர்க்காய்
சாத்தானை வென்றாரே;
மானிடனாய் எக்கஸ்தியும்
பட்டார் பேரன்பிதே!

6. கெத்செமெனெயில், குருசிலும்
வேதனை சகித்தார்
நாம் அவர் போன்றே சகித்து
மரிக்க கற்பித்தார் .

7. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம் ;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்

உம்மாலே தான் என் ஏசுவே பாமாலை 188

1 . உம்மாலே தான் என் ஏசுவே,
ரட்சிக்கப்படுவேன்;
உம்மாலே தான் பேரின்பத்தை
அடைந்து

2 . இப்பத்தியில் நீர் ஈவது ,
பரம அமிர்தம்;
இனி நான் பெற்றுக் கொள்வது
அனந்த பாக்கியம் .

3 .இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தை தந்தீர்;
இக்கட்டு வரும் பொழுது ,
நீர் என்னைத் தேற்றுவீர் .

4.பூமியில் தங்கும் அளவும்
உம்மையேப் பற்றுவேன் ;
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்