Thursday, November 12, 2009

உன்னதரே நீர் மகிமை பாமாலை 4

1.உன்னதரே நீர் மகிமை,
இந்நிலம் சமாதானத்தை
அடைய அன்பு ஓங்க!
பரபரனார் கர்த்தாவே ,
பரம ராஜர் பார்த்தாவே,
வல்லமை தந்தாய், வாழ்க !
தாழ்ந்து வீழ்ந்து ,
போற்றுவோமே புகழ்வோமே
தொழுவோமே;
மாட்சி மேன்மைகென்றும்
ஸ்தோத்ரம் .

2.பிதாவின் ஒரே மைந்தனே
சுதாவே கர்த்தா ராஜரே,
தெய்வாட்டுக்குட்டி நீரே :
பார் மாந்தர் போக்கிடும்,
மா தந்தை பக்கல் ஆண்டிடும்
மகத்துவ கிறிஸ்து நீரே ;
கேட்பீர் ஏற்பீர்
ஏழை நீசர் எங்கள் ஜெபம் தாழ
வாம் வேண்டல் ;
இறங்குவீர் தயவாவடே .

3.நீர் தூயர் தூயர் தூயரே
நீர் கர்த்தர் கர்த்தர் கர்த்தரே ,
என்றென்றும் ஆள்வீர் நீரே;
பிதாவின் ஆசனத்திலே
மேதையாய் வீற்றுப் பாங்கினில்
கர்த்தாவாம் ஆவியோடே
இன்றும் என்றும்
ஏக மாண்பு ஏக மாட்சி ஏக
மேன்மை
தாங்கி ஆள்வீர் தேவரீரே .

Monday, November 9, 2009

உம்மைத் துதிக்கிறோம்

பாமாலை 2
1. உம்மைத் துதிக்கிறோம் ,யாவுக்கும் வல்ல பிதாவே ;
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ, ராஜாதி ராஜாவே;
உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே .

2.கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி,
எங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும்.

3. நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே
நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே.
ஏகமாய் நீர் அர்சிக்கப்படுகிறீர்.உன்னத கர்த்தரே ஆமேன்

Sunday, November 8, 2009

ஆத்மமே, உன் ஆண்டவரின்

பாமாலை 1
1. ஆத்மமே, உன் ஆண்டவரின்
திருப்பாதம்பணிந்து,
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து,
அல்லேலுயா , என்றென்றைக்கும்
நித்திய் நாதரைப் போற்று.

2 .நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய்த் துதி:
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி :
அல்லேலுயா , அவர் உண்மை
மா மகிமையாம் துதி

3. தந்தைபோல் மா தயை உள்
ள்ளோர்;நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம்கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே;
அல்லேலுயா , இன்னும் அவர்
அருள் விரிவானதே .
4. என்றும் நின்றவர் சமுகம்
போற்றும் தூதர் கூட்டமே;
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவீர் நீர் பக்தரே ;
அல்லேலுயா , அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே