Wednesday, June 2, 2010

தூய தூய தூயா! சர்வ வல்ல நாதா

1.தூய, தூய , தூயா! சர்வ வல்ல நாதா !
தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே ;
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே !

2.தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று
தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே ,
கேருபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று ,
இன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே !

3.தூய, தூய, தூயா ! ஜோதி பிரகாசா
பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர் ?
நீரே தூய தூயர் , மனோவாக்குக் கெட்டா
மாட்சிமை ,தூய்மை ,அன்பும் நிறைந்தோர் .

4. தூய, தூய, தூயா! சர்வ வல்ல நாதா !
வானம் பூமி ஆழி உம்மை ஸ்தோத்தரிக்குமே;
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே , தூய திரியேகரே!

No comments:

Post a Comment