Saturday, June 5, 2010

தெய்வ ஆட்டுக்குட்டியே லோகத்தாரின்

1.தெய்வ ஆட்டுக்குட்டியே ,
லோகத்தாரின் மீட்பரே ,
உம்மால் மீட்கப்பட்ட நான்
தேவரீர்க்கு அடியான்;
நீர் என் கோட்டை தஞ்சமாம் ,
ஆர் என் வாழ்வை நீக்கலாம்?

2.உம்மைப் பற்றும் நேசத்தை ,
உம்மில் வைக்கும் பக்தியை
பேயும், கெட்ட லோகமும்
மூர்க்கமாய் விரோதிக்கும் ;
இன்பம் துன்பம் நித்தமே
கன்னியாக நிற்குமே .

3.கர்த்தரே , என் உள்ளத்தில்
அருள் தந்தென் மனதில்
அந்தகாரம் நீங்கிட ,
அன்பின் தீபம் ஸ்வாலிக்க,
ஆவியின் நல ஈவையும்
பூர்த்தியாக அளியும்.

4.எந்த நாழிகையிலே
நீர் வந்தாலும், இயேசுவே,
உம்மையே நான் சந்திக்க
கண்ணால் கண்டு களிக்க,
நான் விழித்திருக்கவே
நித்தம் ஏவியருளும்

No comments:

Post a Comment