Tuesday, April 13, 2010

நீரோடையை மான் வாஞ்சித்து பாமாலை 375

பாமாலை 375
1 நீரோடையை மான் வாஞ்சித்து

கதறும் வண்ணமாய் ,

என் ஆண்டவா , என் ஆத்துமம்

தவிக்கும் உமக்காய் .

2. தாள கர்த்தா, உமக்காய்

என் உள்ளம் ஏங்காதோ ?

உம மாட்சியுள்ள முகத்தை

எப்போது காண்பேனோ?

3.என் உள்ளமே . விசாரம் ஏன்?

நம்பிக்கை கொண்டு நீ

சதா ஜீவ ஊற்றேயாம்

கர்த்தாவை ஸ்தோத்தரி.

4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா

குமாரன், ஆவிக்கும்,

ஆதி முதல் என்றென்றுமே

துதி உண்டாகவும்.

இயேசு எங்கள் மேய்ப்பர் பாமாலை 237

1.இயேசு எங்கள் மேய்ப்பர் ,
கண்ணீர் துடைப்பார் ;
மார்பில் சேர்த்தணைத்து
பயம் நீக்குவார் ;
துன்பம் நேரிட்டாலும் ,
இன்பம் ஆயினும் .
எசுவின்பின் செல்வோம்
பாளர் யாவரும் .
2. நல்ல மேய்ப்பர் சத்தம்
நன்றாய் அறிவோம் ;
காதுக்கின்பமாக
கேட்டுக் களிப்போம் ;
கண்டித்தாலும், நேசர்
ஆற்றித் தேற்றுவார் ;
நாங்கள் பின்னே செல்ல
வழி காட்டுவார்.

3. ஆட்டுக்காக மேய்ப்பர்
ரத்தம் சிந்தினார்;
அதில் மூழ்கினோரே
தூயர் ஆகுவார்;
பாவ குணம் நீக்கி
முற்றும் ரட்சிப்பார்!
திவ்விய தூய சாயல்
ஆக மாற்றுவார் .

4.இயேசு நல்ல மேய்ப்பர்
ஆட்டைப் போஷிப்பார் !
ஓநாய்கள் வந்தாலும்
தொடவே ஒட்டார் ,
சாவின் பள்ளத்தாக்கில்
அஞ்சவே மாட்டோம் ,
பாதாளத்தின் மேலும்
ஜெயங்கொள்ளுவோம்

என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே பாமாலை 189

1.என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே ;
உம பாதத்தண்டை நிற்கிறேன் ;
திக்கற்ற பிள்ளை கெஞ்சவே ,
தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமென் .

2. என் கிரியைகள் எம்மாத்திரம் ?
பிரயாசை எல்லாம் விருதா '
உம்மாலேயே மெய்ப் பாக்கியம்
உண்டாகும் நேச ரட்சகா .

3. உந்தன் சரீரம் ரத்தமும்
மெய்ப் பொருள் என்று அறிவேன் ;
உட்கொண்டன்பாய் அருந்தவும்,
நன் பரவசமாகுவேன்.

4. மாசற்ற திரு ரத்தத்தைக்
கொண் டென்னைச் சுத்திகரியும் ;
மா திவ்விய ஜீவா அப்பத்தை
என் நெஞ்சில் தந்தருளும் .

5 . என் நாதா, உம ஸரிரமாஎ
மேலான திவ்விய போஜனம்;
மாசற்ற உந்தன் ரத்தமே
மையான பான பாக்கியம்

. உன்னதம், ஆழம், எங்கேயும் பாமாலை 3

பாமாலை
1. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம் ;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்.

2. பாவம் நிறைந்த பூமிக்கு,
இரண்டாம் ஆதாமே,
போரில் சகாயராய் வந்தார்
ஆ, நேச ஞானமே !

3. முதல் ஆதாமின் பாவத்தால்
விழுந்த மாந்தர் தாம்
ஜெயிக்கத் துணையாயினார்;
ஆ ஞான அன்பிதாம் !

4. மானிடர் சுபாவம் மாறவே ,
அருளைப் பார்க்கிலும்
சிறந்த ஏது தாம் என்றே
ஈந்தாரே தம்மையும்

5. மானிடனாய் மானிடர்க்காய்
சாத்தானை வென்றாரே;
மானிடனாய் எக்கஸ்தியும்
பட்டார் பேரன்பிதே!

6. கெத்செமெனெயில், குருசிலும்
வேதனை சகித்தார்
நாம் அவர் போன்றே சகித்து
மரிக்க கற்பித்தார் .

7. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம் ;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்

உம்மாலே தான் என் ஏசுவே பாமாலை 188

1 . உம்மாலே தான் என் ஏசுவே,
ரட்சிக்கப்படுவேன்;
உம்மாலே தான் பேரின்பத்தை
அடைந்து

2 . இப்பத்தியில் நீர் ஈவது ,
பரம அமிர்தம்;
இனி நான் பெற்றுக் கொள்வது
அனந்த பாக்கியம் .

3 .இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தை தந்தீர்;
இக்கட்டு வரும் பொழுது ,
நீர் என்னைத் தேற்றுவீர் .

4.பூமியில் தங்கும் அளவும்
உம்மையேப் பற்றுவேன் ;
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்