Saturday, July 3, 2010

ஆராய்ந்து பாரும் ,கர்த்தரே

ஆராய்ந்து பாரும், கர்த்தரே ,
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும் .

ஆராயும் எந்தன் உள்ளத்தை
நீர் சோதித்தறிவீர் ;
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்.

ஆராயும் சுடரொளியால்
தூராசை தோன்றவும் ;
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும் .

ஆராயும் சிந்தை, யோசனை
எவ்வகை நோக்கமும் ,
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்.

ஆராயும் மறைவிடத்தை
உமா தூய கண்ணினால் ;
ஆரோசிப்பேன் என் பாவத்தை
உம பேரருளினால் .

இவ்வாறு நீர் ஆராய்கையில்
சாஷ்டாங்கம் பண்ணுவேன் ;
உம சரணார விந்ததில்
பணிந்து போற்றுவேன்

1 comment:

Kannan said...

மிகவும் அருமை

Post a Comment