Monday, May 31, 2010

அஞ்சாதிரு என் நெஞ்சமே பாமாலை 328

1.அஞ்சாதிரு ,என் நெஞ்சமே ,
உன் கர்த்தர் துன்ப நாளிலே
கண் பார்ப்போம் என்கிறார் ;
இக்கட்டில் திகையாதிரு ,
தகுந்த துணை உனக்கு
தப்பாமல் செய்குவார்.

2. தாவீதும் யோபும் யோசேப்பும்
அநேக நீதிமான்களும்
உன்னிலும் வெகுவாய் .
கசதி அடைந்தும் ,பக்தியில்
வேரூன்றி ஏற்ற வேளையில்
வாழ்ந்தார்கள் பூர்த்தியாய் .

3.கருத்தாய் தெய்வ தயவை
எப்போ தும் நம்பும் பிள்ளையை
சகாயர் மறவார் ;
மேயபக்தி உன்னில் வேர்கொண்டால்
இரக்கமான கரத்தால்
அணைத்து பாலிப்பார் .

4.என் நெஞ்சமே ,மகிழ்ந்திரு
பேய் ,லோகம், துன்பம் உனக்கு
பொல்லாப்புச் செய்யாதே ;
இம்மானுவேல் உன் கன்மலை ,
அவர் மேல் வைத்த நம்பிக்கை
அபத்தம் ஆகாதே.

Thursday, May 27, 2010

காரிருளில் என் நேச தீபமே பாமாலை 323

1.காரிருளில் என் நேச தீபமே ,நடத்துமேன் ;
வேறொளியில்லை, வீடும் தூரமே நடத்துமேன் ;
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்
ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன் .


2.என் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ !முன்னாளிலே ;
ஒத்தாசை தேடவில்லை ;இப்போதோ நடத்துமே
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன் , அன்பாக மன்னியும் .

3.இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்; இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும் ;
உதய நேரம் வர களிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்

பாதை காட்டும் மா யெகோவா பாமாலை 324

1.பாதை காட்டும் மா யெகோவா,

பரதேசியான நான்

பலவீனன், அறிவீனன் ,

இவ்வுலோகம் காடு தான்,

வானாகரம்

தந்து என்னைப் போஷியும்.



2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை

நீர் திறந்து தாருமேன் ;

தீப மேக ஸ்தம்பம் காட்டும்.

வழியில் நடத்துமேன் ;

வல்ல மீட்பர் !

என்னைத் தாங்கும், இயேசுவே.



3.சாவின் அந்தகாரம் வந்து

என்னை மூடும் நேரத்தில்

சாவின் மேலும் வெற்றித் தந்து ,

என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ;

கீத வாழ்த்தல்

உமக்கென்றும் பாடுவேன் .



Wednesday, May 26, 2010

கர்த்தாவை நல்ல பக்தியாலே பாமாலை 322

1.கர்த்தாவை நல்ல பக்தியாலே

எப்போதும் நம்பும் நீதிமான்

எத்தீங்கிலும் அவராலே

அன்பைக் காப்பற்றப்படுவான் ;

உன்னதமான கர்த்தரை

சார்ந்தோர்க்கவர் கன்மலை .

2.அழுத்தும் கவலைகளாலே

பலன் ஏதாகிலும் உண்டோ?

நாம் நித்தம் சஞ்சலத்தினாலே

தவிப்பது உதவுமோ ?

விசாரத்தாலே நமக்கு

இக்கட்டதிகரிக்கது .

3.உன் காரியத்தை நலமாக

திருப்ப வல்லவர்க்கு

நீ அதை ஒப்புவிப்பாயாக ;

விசாரிப்பார் ,அமர்ந்திரு ,

மா திட்டமாய்த் தயாபரர்

உன் தாழ்ச்சியை அறிந்தவர் .

4.சந்தோஷிப்பிக்கிறதான

நாள் எதென்றவர் அறிவார் ;

அநேக நற்குணங்கள் காண

அந்தந்த வேளை தண்டிப்பார் ,

தீவிரமாய்த் திரும்பவும்

தெய்வன்பு பூரிப்பைத் தரும் .

4.நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்

என்றாபத்தில் நினையாதே ;

எப்போதும் பாடும் நோவுமற்றோன்

பிரிய னென்றும் எண்ணாதே ;

அநேக காரியத்துக்கு

பின் மாறுதல் உண்டாகுது .

5.கதியுள்ளோனை ஏழையாக்கி

மகா எளியவனையோ

திரவிய சம்பன்னணாக்கி

உயர்த்த ஸ்வாமிக்கரிதோ ?

தாழ்த்துவார் ,உயர்த்துவார்

அடிக்கிறார் ,அணைக்கிறார் .

7.மன்றாடி பாடி கிரிஸ்தோனாக

நடந்து கொண்டுன் வேலையை

நீ உண்மையோடே செய்வாயாக ;

அப்போ தெய்வாசீர்வாதத்தை

திரும்பக் காண்பாய் ; நீதிமான்

கர்த்தாவால் கைவிடப்படான்