Friday, June 25, 2010

இயேசு நாதா காக்கிறீர்

1.இயேசு நாதா! காக்கிறீர் ,
இளைப்பாறச் செய்கிறீர் ,
மோசம் நேரிடாமலும் ,
பாதம் இடறாமலும்,
என்னைத் தாங்கி நிற்கிறீர் ;
நேச நாதா காக்கிறீர்.

2.வாரிபோன்ற லோகத்தில்
யாத்திரை செய்து போகையில் ,
சூறைக்காற்று மோதினும் ,
ஆழி கோஷ்டமாயினும்,
அமைதல் உண்டாக்குவீர் !
நேச நாதா காக்கிறீர் !

3.சற்று தூரம் செல்லவே ,
மோட்ச கரை தோன்றுமே !
துன்பம் நீங்கி வாழுவேன் ;
இன்பம் பெற்று போற்றுவேன் ;
அதுமட்டும் தாங்குவீர் ;
நேச நாதா காக்கிறீர் .

No comments:

Post a Comment