Saturday, June 5, 2010

என் மீட்பர் ரத்தம் சிந்தினார்

1.என் மீட்பர் ரத்தம் சிந்தினார் ;
மா நீதியும் சம்பாதித்தார்;
என் சொந்த நீதி வெறுத்தேன் ;
இயேசுவின் நாமம் நம்புவேன் ;
நான் நிற்கும் பாதை கிறிஸ்து தான்
வேறஸ்திபாரம் மணல் தான் .

2.கார் மேகம் அவர் முகத்தை
மறைக்கும் காலம், அவரை
எப்போதும்போல நம்புவேன் ,
மாறாதவர் என்றறிவேன் ;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான் ,
வேறஸ்திபாரம் மணல் தான் .

3.மரண வெள்ளம் பொங்கினும்
என் மாம்சம் சோர்ந்து போயினும்
உன் வாக்குத்தத்தம் ஆணையும்
என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்
நன் நிற்கும்பாறை கிறிஸ்து தான் ,
வேறஸ்திபாரம் மணல் தான் .

4.நியாயத்தீர்ப்புக் காலத்தில்
எக்காள சத்தம் கேட்கையில்,
அஞ்சேன் என் மீட்பர் நீதியே
அநீதன் என்னை மூடுமே ;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்
வேறஸ்திபாரம் மணல் தான்

No comments:

Post a Comment