Saturday, June 5, 2010

பிளவுண்ட மலையே புகலிடம் இதுவே

1.பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும் ,பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.

எந்த கிரியை செய்துமே, உந்தன் நீதி கிட்டாதே
கண்ணிர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும் ,
பாவம் நீங்க மாட்டாதே ;நீரே மீட்பர் இயேசுவே.

யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் நான் ;
உம சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே ;
தூய ஊற்றை அண்டினேன் .தூய்மையாக்கேல் மாளுவேன் .

நிழல் போன்ற வாழ்விலே , கண்ணை மூடும் சாவிலே ,
கண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில் ,
பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே

No comments:

Post a Comment