Sunday, January 23, 2011
கர்த்தரே தற்காரும்
எங்கள் மேல் உம் முகத்தை வைத்து வீசும் ஒளியை .
எங்களுக்கன்றன்று சமாதானம் தந்து
கிறிஸ்துவைக் காட்டிப் போதிக்கும் உமதாவியைக் கொடும்
எங்கள் மீட்பரான இயேசுவின் மேலான
நாமத்துக்கு மகிமை ; ஆமென் , கேட்பீர் ஜெபத்தை.
கர்த்தர் தந்த ஈவுக்காக
விண்ணோர் மண்ணோர் கூட்டமாக பாடுவார் சங்கீர்த்தனம்
மீட்கப்பட்ட யாவராலும் ஏக தேவரீருக்கே
ஆரவாரமாய் என்றைக்கும் தோத்திரம் உண்டாகவே
எல்லா நன்மைக்கும் காரணா!
எல்லாரும் போற்றும் ஆரணா!
நல்ல நாதா! வல்ல வேந்தா !
பொல்லாப்பைப் போக்கும் பேர் மன்னா!
பலகோடி நன்றி பூரணா!
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா!
என் ஜீவன் போகும் நேரம் பாமாலை 394
பேரின்ப அருணோதயம் , இதோ! விடிந்ததே ;
ராக் கால மோசம் நீங்கும் வின் சுடரொளியில் ;
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில்.
2.ஆ, நேச ஜீவ ஊற்று என் அருள் நாதரே !
ஈண்டுண்ணும் ஜீவ தண்ணீர் அங்காழி போலாமே ;
பேரன்பின் பெருவெள்ளம் பாய்ந்தோடும் மோட்சத்தில் ;
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப மோட்சத்தில்;
3. அன்போடும் நீதியோடும் என் சுக துக்கமும்
ஆண்டென்னைப் பாதுகாத்து வந்தார் எந்நேரமும் ;
ஆ! போற்றுவேன் தெய்வன்பை ஆனந்த கடலில் ;
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில் .
4. நல் நித்திரை செய்து பின்பு மாசற்றெழும்புவேன் ;
என் மீட்பரை நான் கண்டு ஆனந்தம் அடைவேன் ;
ராஜாதி ராஜன் என்னை அழைக்கும் நேரத்தில்
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில் .
5. தன் ஆடையைப் பாராமல் பர்த்தாவின் முகத்தை
பத்தினி நோக்குமாறு , நான் ஜீவ கீரடத்தை
நோக்காமல் , மீட்பர் மாண்பை பார்ப்பேன் அவ்வேளையில் ;
இம்மானுவேலே ஜோதி பேரின்ப தேசத்தில்
எல்லாருக்கும் மா உன்னதர் கர்த்தாதி பாமாலை 261
மெய்யான தெய்வ மனிதர் , நீர் வாழ்க, இயேசுவே .
2.விண்ணில் பிரதானியான நீர் பகைஞர்க்காகவே ,
மண்ணில் இறங்கி மரித்தீர்; நீர் வாழ்க, இயேசுவே
3.பிசாசு, பாவம், உலகை உம் சாவால் மிதித்தே,
ஜெயித்தடைந்தீர் வெற்றியை; நீர் வாழ்க ,இயேசுவே
4.நீர் வென்றபடி நாங்களும் வென்றேறிப் போகவே ;
பரத்தில் செங்கோல் செலுத்தும் நீர் வாழ்க , இயேசுவே.
5.விண்ணோர்களோடு மண்ணுள்ளோர் என்றைக்கும் வாழவே ,
பரம வாசல் திறந்தோர் நீர் வாழ்க, இயேசுவே.
Monday, September 13, 2010
என்னோடிரும் மா நேசக் கர்த்தரே
1.என்னோடிரும் மா நேசக் கர்த்தரே ,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே ;
மற்றோர் சகாயம் அற்ற போதிலும்,
நீங்கா ஒத்தாசை நீரே என்னோடிரும்.
2.நீர் மேல் குமிழி போல் என் ஆயுசும் ,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்
கண் கண்ட யாவும் மாறி வாடிடும் ;
மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும் .
3.நியாயம் தீர்ப்போராக என்னண்டை
வராமல் , சாந்தம் தயை கிருபை
நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்
நீர் பாவி நேசரே என்னோடிரும் .
4.நீர் கூட நின்று அருள் புரியும் ;
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
என் துணை நீர் ,என் தஞ்சமாயிரும் ;
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும் .
5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன் ;
சாவே, எங்கே என் கூரும் ஜெயமும் ?
நான் உம்மை வெல்ல நீர் என்னோடிரும் .
6.நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும் ; சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும் ;
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்
Saturday, July 3, 2010
ஆராய்ந்து பாரும் ,கர்த்தரே
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும் .
ஆராயும் எந்தன் உள்ளத்தை
நீர் சோதித்தறிவீர் ;
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்.
ஆராயும் சுடரொளியால்
தூராசை தோன்றவும் ;
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும் .
ஆராயும் சிந்தை, யோசனை
எவ்வகை நோக்கமும் ,
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்.
ஆராயும் மறைவிடத்தை
உமா தூய கண்ணினால் ;
ஆரோசிப்பேன் என் பாவத்தை
உம பேரருளினால் .
இவ்வாறு நீர் ஆராய்கையில்
சாஷ்டாங்கம் பண்ணுவேன் ;
உம சரணார விந்ததில்
பணிந்து போற்றுவேன்