Sunday, January 23, 2011
எல்லா நன்மைக்கும் காரணா!
எல்லாரும் போற்றும் ஆரணா!
நல்ல நாதா! வல்ல வேந்தா !
பொல்லாப்பைப் போக்கும் பேர் மன்னா!
பலகோடி நன்றி பூரணா!
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா!
என் ஜீவன் போகும் நேரம் பாமாலை 394
பேரின்ப அருணோதயம் , இதோ! விடிந்ததே ;
ராக் கால மோசம் நீங்கும் வின் சுடரொளியில் ;
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில்.
2.ஆ, நேச ஜீவ ஊற்று என் அருள் நாதரே !
ஈண்டுண்ணும் ஜீவ தண்ணீர் அங்காழி போலாமே ;
பேரன்பின் பெருவெள்ளம் பாய்ந்தோடும் மோட்சத்தில் ;
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப மோட்சத்தில்;
3. அன்போடும் நீதியோடும் என் சுக துக்கமும்
ஆண்டென்னைப் பாதுகாத்து வந்தார் எந்நேரமும் ;
ஆ! போற்றுவேன் தெய்வன்பை ஆனந்த கடலில் ;
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில் .
4. நல் நித்திரை செய்து பின்பு மாசற்றெழும்புவேன் ;
என் மீட்பரை நான் கண்டு ஆனந்தம் அடைவேன் ;
ராஜாதி ராஜன் என்னை அழைக்கும் நேரத்தில்
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில் .
5. தன் ஆடையைப் பாராமல் பர்த்தாவின் முகத்தை
பத்தினி நோக்குமாறு , நான் ஜீவ கீரடத்தை
நோக்காமல் , மீட்பர் மாண்பை பார்ப்பேன் அவ்வேளையில் ;
இம்மானுவேலே ஜோதி பேரின்ப தேசத்தில்
எல்லாருக்கும் மா உன்னதர் கர்த்தாதி பாமாலை 261
மெய்யான தெய்வ மனிதர் , நீர் வாழ்க, இயேசுவே .
2.விண்ணில் பிரதானியான நீர் பகைஞர்க்காகவே ,
மண்ணில் இறங்கி மரித்தீர்; நீர் வாழ்க, இயேசுவே
3.பிசாசு, பாவம், உலகை உம் சாவால் மிதித்தே,
ஜெயித்தடைந்தீர் வெற்றியை; நீர் வாழ்க ,இயேசுவே
4.நீர் வென்றபடி நாங்களும் வென்றேறிப் போகவே ;
பரத்தில் செங்கோல் செலுத்தும் நீர் வாழ்க , இயேசுவே.
5.விண்ணோர்களோடு மண்ணுள்ளோர் என்றைக்கும் வாழவே ,
பரம வாசல் திறந்தோர் நீர் வாழ்க, இயேசுவே.
Monday, September 13, 2010
என்னோடிரும் மா நேசக் கர்த்தரே
1.என்னோடிரும் மா நேசக் கர்த்தரே ,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே ;
மற்றோர் சகாயம் அற்ற போதிலும்,
நீங்கா ஒத்தாசை நீரே என்னோடிரும்.
2.நீர் மேல் குமிழி போல் என் ஆயுசும் ,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்
கண் கண்ட யாவும் மாறி வாடிடும் ;
மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும் .
3.நியாயம் தீர்ப்போராக என்னண்டை
வராமல் , சாந்தம் தயை கிருபை
நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்
நீர் பாவி நேசரே என்னோடிரும் .
4.நீர் கூட நின்று அருள் புரியும் ;
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
என் துணை நீர் ,என் தஞ்சமாயிரும் ;
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும் .
5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன் ;
சாவே, எங்கே என் கூரும் ஜெயமும் ?
நான் உம்மை வெல்ல நீர் என்னோடிரும் .
6.நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும் ; சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும் ;
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்
Saturday, June 5, 2010
என் மீட்பர் ரத்தம் சிந்தினார்
மா நீதியும் சம்பாதித்தார்;
என் சொந்த நீதி வெறுத்தேன் ;
இயேசுவின் நாமம் நம்புவேன் ;
நான் நிற்கும் பாதை கிறிஸ்து தான்
வேறஸ்திபாரம் மணல் தான் .
2.கார் மேகம் அவர் முகத்தை
மறைக்கும் காலம், அவரை
எப்போதும்போல நம்புவேன் ,
மாறாதவர் என்றறிவேன் ;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான் ,
வேறஸ்திபாரம் மணல் தான் .
3.மரண வெள்ளம் பொங்கினும்
என் மாம்சம் சோர்ந்து போயினும்
உன் வாக்குத்தத்தம் ஆணையும்
என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்
நன் நிற்கும்பாறை கிறிஸ்து தான் ,
வேறஸ்திபாரம் மணல் தான் .
4.நியாயத்தீர்ப்புக் காலத்தில்
எக்காள சத்தம் கேட்கையில்,
அஞ்சேன் என் மீட்பர் நீதியே
அநீதன் என்னை மூடுமே ;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்
வேறஸ்திபாரம் மணல் தான்
Wednesday, June 2, 2010
எவ்வண்ணமாக கர்த்தரே
உம்மை வணங்குவேன் ?
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென தருவேன் ?
2.அநேக காணிக்கைகளால்
உம கோபம் மாறுமோ ?
நான் புண்ணிய கிரியை செய்வதால்
கடாட்சம் வைப்பிரோ ?
3. பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும் , பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே.
4. நான் குற்றவாளி , ஆகையால்
என்பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அளித்தால் நியாயமே .
5.ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்;
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்.
6.இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார் ;
உம திவ்விய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார் .
7.இவ்வண்ணமாக கர்த்தரே ,
உம்மை வணங்குவேன்
என் நீதி இயேசுகிறிஸ்துவே ,
அவரைப் பற்றினேன்
எங்கும் நிறைந்த தெய்வமே
ஏழை அடியார் பணிவாய்
துங்கவன் உந்தன் பாதமே
ஸ்தோத்தரிக்கின்றோம் ஏகமாய் .
2.உலக எண்ணம் நீங்கியே
உந்தனில் திட மனதாய்
நலமாய் உள்ளம் பொங்கியே
நாடித் துதிக்கச் செய் அன்பாய் .
3.கேட்டிடும் தெய்வ வாக்கியம்
கிருபையாய் மனதிலே
நாட்டிட நின் சலாக்கியம்
நாங்கள் நிறையச் செயகாலே .
தூதர்கள் கூடிப் பாடிடும்
தூயர் உம்மை மா பாவிகள்
பாதம் பணிந்து வேண்டினோம்
பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள் .
Tuesday, April 13, 2010
என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே பாமாலை 189
உம பாதத்தண்டை நிற்கிறேன் ;
திக்கற்ற பிள்ளை கெஞ்சவே ,
தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமென் .
2. என் கிரியைகள் எம்மாத்திரம் ?
பிரயாசை எல்லாம் விருதா '
உம்மாலேயே மெய்ப் பாக்கியம்
உண்டாகும் நேச ரட்சகா .
3. உந்தன் சரீரம் ரத்தமும்
மெய்ப் பொருள் என்று அறிவேன் ;
உட்கொண்டன்பாய் அருந்தவும்,
நன் பரவசமாகுவேன்.
4. மாசற்ற திரு ரத்தத்தைக்
கொண் டென்னைச் சுத்திகரியும் ;
மா திவ்விய ஜீவா அப்பத்தை
என் நெஞ்சில் தந்தருளும் .
5 . என் நாதா, உம ஸரிரமாஎ
மேலான திவ்விய போஜனம்;
மாசற்ற உந்தன் ரத்தமே
மையான பான பாக்கியம்