Sunday, January 23, 2011
கர்த்தரே தற்காரும்
எங்கள் மேல் உம் முகத்தை வைத்து வீசும் ஒளியை .
எங்களுக்கன்றன்று சமாதானம் தந்து
கிறிஸ்துவைக் காட்டிப் போதிக்கும் உமதாவியைக் கொடும்
எங்கள் மீட்பரான இயேசுவின் மேலான
நாமத்துக்கு மகிமை ; ஆமென் , கேட்பீர் ஜெபத்தை.
கர்த்தர் தந்த ஈவுக்காக
விண்ணோர் மண்ணோர் கூட்டமாக பாடுவார் சங்கீர்த்தனம்
மீட்கப்பட்ட யாவராலும் ஏக தேவரீருக்கே
ஆரவாரமாய் என்றைக்கும் தோத்திரம் உண்டாகவே
Thursday, May 27, 2010
காரிருளில் என் நேச தீபமே பாமாலை 323
வேறொளியில்லை, வீடும் தூரமே நடத்துமேன் ;
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்
ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன் .
2.என் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ !முன்னாளிலே ;
ஒத்தாசை தேடவில்லை ;இப்போதோ நடத்துமே
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன் , அன்பாக மன்னியும் .
3.இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்; இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும் ;
உதய நேரம் வர களிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்
Wednesday, May 26, 2010
கர்த்தாவை நல்ல பக்தியாலே பாமாலை 322
1.கர்த்தாவை நல்ல பக்தியாலே
எப்போதும் நம்பும் நீதிமான்
எத்தீங்கிலும் அவராலே
அன்பைக் காப்பற்றப்படுவான் ;
உன்னதமான கர்த்தரை
சார்ந்தோர்க்கவர் கன்மலை .
2.அழுத்தும் கவலைகளாலே
பலன் ஏதாகிலும் உண்டோ?
நாம் நித்தம் சஞ்சலத்தினாலே
தவிப்பது உதவுமோ ?
விசாரத்தாலே நமக்கு
இக்கட்டதிகரிக்கது .
3.உன் காரியத்தை நலமாக
திருப்ப வல்லவர்க்கு
நீ அதை ஒப்புவிப்பாயாக ;
விசாரிப்பார் ,அமர்ந்திரு ,
மா திட்டமாய்த் தயாபரர்
உன் தாழ்ச்சியை அறிந்தவர் .
4.சந்தோஷிப்பிக்கிறதான
நாள் எதென்றவர் அறிவார் ;
அநேக நற்குணங்கள் காண
அந்தந்த வேளை தண்டிப்பார் ,
தீவிரமாய்த் திரும்பவும்
தெய்வன்பு பூரிப்பைத் தரும் .
4.நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்
என்றாபத்தில் நினையாதே ;
எப்போதும் பாடும் நோவுமற்றோன்
பிரிய னென்றும் எண்ணாதே ;
அநேக காரியத்துக்கு
பின் மாறுதல் உண்டாகுது .
5.கதியுள்ளோனை ஏழையாக்கி
மகா எளியவனையோ
திரவிய சம்பன்னணாக்கி
உயர்த்த ஸ்வாமிக்கரிதோ ?
தாழ்த்துவார் ,உயர்த்துவார்
அடிக்கிறார் ,அணைக்கிறார் .
7.மன்றாடி பாடி கிரிஸ்தோனாக
நடந்து கொண்டுன் வேலையை
நீ உண்மையோடே செய்வாயாக ;
அப்போ தெய்வாசீர்வாதத்தை
திரும்பக் காண்பாய் ; நீதிமான்
கர்த்தாவால் கைவிடப்படான்
Tuesday, December 15, 2009
கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர் ;
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர் .
உம ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம் ;
உம வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம் .
பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன் .
ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே ;
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே
சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார் ;
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார் .
கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர் ;
இக்கட்டில் நற் சகயராய்
எம் நித்ய வீதாவீர்
எழுதியவர்
ஐசக் வாட்ஸ்