ஆராய்ந்து பாரும், கர்த்தரே ,
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும் .
ஆராயும் எந்தன் உள்ளத்தை
நீர் சோதித்தறிவீர் ;
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்.
ஆராயும் சுடரொளியால்
தூராசை தோன்றவும் ;
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும் .
ஆராயும் சிந்தை, யோசனை
எவ்வகை நோக்கமும் ,
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்.
ஆராயும் மறைவிடத்தை
உமா தூய கண்ணினால் ;
ஆரோசிப்பேன் என் பாவத்தை
உம பேரருளினால் .
இவ்வாறு நீர் ஆராய்கையில்
சாஷ்டாங்கம் பண்ணுவேன் ;
உம சரணார விந்ததில்
பணிந்து போற்றுவேன்
Showing posts with label ஆ வரிசை பாடல்கள். Show all posts
Showing posts with label ஆ வரிசை பாடல்கள். Show all posts
Saturday, July 3, 2010
Wednesday, June 2, 2010
ஆ கர்த்தாவே தாழ்மையாக
1.ஆ கர்த்தாவே , தாழ்மையாக
திருப்பாதத்ண்டையே
தெண்டனிட ஆவலாக
வந்தேன், நல்ல இயேசுவே;
உம்மை தேடி
தரிசிக்கவே வந்தேன்.
2. வல்ல கர்த்தாவினுடைய
தூய ஆட்டுக்குட்டியே ,
நீரே என்றும் என்னுடைய
ஞான மணவாளனே ;
உம்மை தேடி
தரிசிக்கவே வந்தேன் .
3.என் பிரார்த்தனையைக் கேளும்,
அத்தியந்த பணிவாய்
கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்
உம்முடைய பிள்ளையாய்
உம்மை தேடி தரிசிக்கவே வந்தேன்
Sunday, November 8, 2009
ஆத்மமே, உன் ஆண்டவரின்
பாமாலை 1
1. ஆத்மமே, உன் ஆண்டவரின்
திருப்பாதம்பணிந்து,
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து,
அல்லேலுயா , என்றென்றைக்கும்
நித்திய் நாதரைப் போற்று.
2 .நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய்த் துதி:
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி :
அல்லேலுயா , அவர் உண்மை
மா மகிமையாம் துதி
3. தந்தைபோல் மா தயை உள்
ள்ளோர்;நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம்கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே;
அல்லேலுயா , இன்னும் அவர்
அருள் விரிவானதே .
4. என்றும் நின்றவர் சமுகம்
போற்றும் தூதர் கூட்டமே;
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவீர் நீர் பக்தரே ;
அல்லேலுயா , அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே
1. ஆத்மமே, உன் ஆண்டவரின்
திருப்பாதம்பணிந்து,
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து,
அல்லேலுயா , என்றென்றைக்கும்
நித்திய் நாதரைப் போற்று.
2 .நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய்த் துதி:
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி :
அல்லேலுயா , அவர் உண்மை
மா மகிமையாம் துதி
3. தந்தைபோல் மா தயை உள்
ள்ளோர்;நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம்கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே;
அல்லேலுயா , இன்னும் அவர்
அருள் விரிவானதே .
4. என்றும் நின்றவர் சமுகம்
போற்றும் தூதர் கூட்டமே;
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவீர் நீர் பக்தரே ;
அல்லேலுயா , அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே
Subscribe to:
Posts (Atom)