1.நான் பாவி தான் ,- ஆனாலும் நீர்
மாசற்ற ரத்தம் சிந்தினீர்;
'வா' என்று என்னை அழைத்தீர் ;
என் மீட்பரே வந்தேன் .
2.நான் பாவி தான் -என் நெஞ்சிலே
கறை பிடித்து கெட்டேனே ;
என் கறை நீங்க இப்போதே ,
என் மீட்பரே வந்தேன் .
3.நான் பாவி தான்- மா பயத்தால்
திகைத்து பாவ பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வந்தேன் .
4.நான் பாவி தான் ,- மெய்யாயினும்
சீர், நேர்மை , செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே வந்தேன் .
5. நான் பாவி தான் ,-இரங்குவீர் ,
அணைத்து, காத்து , ரட்சிப்பீர் ,
அருளாம் செல்வம் அளிப்பீர் ,
என் மீட்பரே வந்தேன் .
6.நான் பாவி தான் -அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர் ;
உமக்கு சொந்தம் ஆக்கினீர் ;
என் மீட்பரே வந்தேன் .
மாண்டு
Showing posts with label ந வரிசை பாடல்கள். Show all posts
Showing posts with label ந வரிசை பாடல்கள். Show all posts
Wednesday, June 23, 2010
Tuesday, April 13, 2010
நீரோடையை மான் வாஞ்சித்து பாமாலை 375
பாமாலை 375
1 நீரோடையை மான் வாஞ்சித்து
கதறும் வண்ணமாய் ,
என் ஆண்டவா , என் ஆத்துமம்
தவிக்கும் உமக்காய் .
2. தாள கர்த்தா, உமக்காய்
என் உள்ளம் ஏங்காதோ ?
உம மாட்சியுள்ள முகத்தை
எப்போது காண்பேனோ?
1 நீரோடையை மான் வாஞ்சித்து
கதறும் வண்ணமாய் ,
என் ஆண்டவா , என் ஆத்துமம்
தவிக்கும் உமக்காய் .
2. தாள கர்த்தா, உமக்காய்
என் உள்ளம் ஏங்காதோ ?
உம மாட்சியுள்ள முகத்தை
எப்போது காண்பேனோ?
3.என் உள்ளமே . விசாரம் ஏன்?
நம்பிக்கை கொண்டு நீ
சதா ஜீவ ஊற்றேயாம்
கர்த்தாவை ஸ்தோத்தரி.
4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா
குமாரன், ஆவிக்கும்,
ஆதி முதல் என்றென்றுமே
துதி உண்டாகவும்.
Subscribe to:
Posts (Atom)