Showing posts with label க வரிசை பாடலகள். Show all posts
Showing posts with label க வரிசை பாடலகள். Show all posts

Saturday, June 5, 2010

களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே

1.களிகூருவோம் ,கர்த்தர் நம் பட்சமே ;தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே ,எப்பாவம் பயம் நீக்குவார் ,
கர்த்தர் நம் பட்சம் கர்த்தர் நம்மோடு கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர் ?
யார் எதிர்க்க வல்லோர் ? யார் வல்லோர்?

2.திடனடைவோம் , தீமை மேற்கொள்ளுவோம்
கர்த்தாவின் வல்ல கரத்தால் !
உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம் ,
அவரே திடன் ஆகையால் .

3.வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய்
கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே ;
பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய்
நிலைக்கும் , இது மெய் மெய்யே

4. நிலைத்திருப்போம் ,கர்த்தரின் கட்டினில்,
அதால் நித்திய ஜீவன் உண்டாம் ;
பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்
வைத்தென்றும் பாதுகாப்பாராம்

Tuesday, December 15, 2009

.காரிருளில் என் நேச தீபமே

1.காரிருளில் என் நேச தீபமே ,
நடத்துமேன் ;
வேறொளியில்லை; வீடும் தூரமே ,
நடத்துமேன் ;
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன் :
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமேன் .

2. என் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ !
முன்னாளிலே ;
ஒத்தாசை தேடவில்லை இப்போதோ
நடத்துமே;
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்

3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் ;
இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர்
நடத்திடும் ;
உதய நேரம் வரக் கழிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்

எழுதியவர் ஜான் .H. நியூமன்