Thursday, September 13, 2012

யாரை நான் புகழுவேன் யாரை நான் அறிகிறேன்

  1. யாரை நான் புகழுவேன் யாரை நான் அறிகிறேன் ?
          என் கதியும் பங்கும் யார் , நான் பாராட்டும் மேன்மை யார்?
          தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
     2. யார் நான் நிற்கும் கன்மலை , யார் என் திட நம்பிக்கை ?
         குற்றத்தை சுமந்தோர் யார் , தெய்வ நேசம் தந்தோர் யார் ?
         தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
     3. எந்தன் எந்தன் பிராண பெலன் யார், ஆத்துமத்தின் சாரம் யார் ?
         யாரால் பாவி நீதிமான், யாரால் தெய்வ பிள்ளை நான்?
         தெய்வ ஆட்டுக்குட்டியால் .
      4. கஸ்தியில் சகாயர் யார்,சாவின் சாவு ஆனோர் யார் ?
          என்னை தூதர் கூட்டத்தில்,சேர்ப்போர் யார் நான் சாகையில்?
         தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
      5. இயேசு தான் என் ஞானமே , அவர் என் சங்கீதமே :
         நீங்களும் புகழுங்கள் , அவரைப் பின் செல்லுங்கள்
         தெய்வ ஆட்டுக்குட்டியை .
        
        
       

No comments:

Post a Comment