Monday, September 13, 2010

என்னோடிரும் மா நேசக் கர்த்தரே

1.என்னோடிரும் மா நேசக் கர்த்தரே ,

வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே ;

மற்றோர் சகாயம் அற்ற போதிலும்,

நீங்கா ஒத்தாசை நீரே என்னோடிரும்.

2.நீர் மேல் குமிழி போல் என் ஆயுசும் ,

இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்

கண் கண்ட யாவும் மாறி வாடிடும் ;

மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும் .

3.நியாயம் தீர்ப்போராக என்னண்டை

வராமல் , சாந்தம் தயை கிருபை

நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்

நீர் பாவி நேசரே என்னோடிரும் .

4.நீர் கூட நின்று அருள் புரியும் ;

பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்

என் துணை நீர் ,என் தஞ்சமாயிரும் ;

இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும் .

5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;

நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன் ;

சாவே, எங்கே என் கூரும் ஜெயமும் ?

நான் உம்மை வெல்ல நீர் என்னோடிரும் .

6.நான் சாகும் அந்தகார நேரத்தில்

உம் சிலுவையைக் காட்டும் ; சாகையில்

விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும் ;

வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்

No comments:

Post a Comment