Sunday, January 23, 2011

என் ஜீவன் போகும் நேரம் பாமாலை 394

1.என் ஜீவன் போகும் நேரம் சமீபம் வந்ததே ;
பேரின்ப அருணோதயம் , இதோ! விடிந்ததே ;
ராக் கால மோசம் நீங்கும் வின் சுடரொளியில் ;
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில்.

2.ஆ, நேச ஜீவ ஊற்று என் அருள் நாதரே !
ஈண்டுண்ணும் ஜீவ தண்ணீர் அங்காழி போலாமே ;
பேரன்பின் பெருவெள்ளம் பாய்ந்தோடும் மோட்சத்தில் ;
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப மோட்சத்தில்;

3. அன்போடும் நீதியோடும் என் சுக துக்கமும்
ஆண்டென்னைப் பாதுகாத்து வந்தார் எந்நேரமும் ;
ஆ! போற்றுவேன் தெய்வன்பை ஆனந்த கடலில் ;
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில் .

4. நல் நித்திரை செய்து பின்பு மாசற்றெழும்புவேன் ;
என் மீட்பரை நான் கண்டு ஆனந்தம் அடைவேன் ;
ராஜாதி ராஜன் என்னை அழைக்கும் நேரத்தில்
மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில் .

5. தன் ஆடையைப் பாராமல் பர்த்தாவின் முகத்தை
பத்தினி நோக்குமாறு , நான் ஜீவ கீரடத்தை
நோக்காமல் , மீட்பர் மாண்பை பார்ப்பேன் அவ்வேளையில் ;
இம்மானுவேலே ஜோதி பேரின்ப தேசத்தில்

No comments:

Post a Comment