Tuesday, April 13, 2010

. உன்னதம், ஆழம், எங்கேயும் பாமாலை 3

பாமாலை
1. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம் ;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்.

2. பாவம் நிறைந்த பூமிக்கு,
இரண்டாம் ஆதாமே,
போரில் சகாயராய் வந்தார்
ஆ, நேச ஞானமே !

3. முதல் ஆதாமின் பாவத்தால்
விழுந்த மாந்தர் தாம்
ஜெயிக்கத் துணையாயினார்;
ஆ ஞான அன்பிதாம் !

4. மானிடர் சுபாவம் மாறவே ,
அருளைப் பார்க்கிலும்
சிறந்த ஏது தாம் என்றே
ஈந்தாரே தம்மையும்

5. மானிடனாய் மானிடர்க்காய்
சாத்தானை வென்றாரே;
மானிடனாய் எக்கஸ்தியும்
பட்டார் பேரன்பிதே!

6. கெத்செமெனெயில், குருசிலும்
வேதனை சகித்தார்
நாம் அவர் போன்றே சகித்து
மரிக்க கற்பித்தார் .

7. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம் ;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்

No comments:

Post a Comment