Tuesday, April 13, 2010

இயேசு எங்கள் மேய்ப்பர் பாமாலை 237

1.இயேசு எங்கள் மேய்ப்பர் ,
கண்ணீர் துடைப்பார் ;
மார்பில் சேர்த்தணைத்து
பயம் நீக்குவார் ;
துன்பம் நேரிட்டாலும் ,
இன்பம் ஆயினும் .
எசுவின்பின் செல்வோம்
பாளர் யாவரும் .
2. நல்ல மேய்ப்பர் சத்தம்
நன்றாய் அறிவோம் ;
காதுக்கின்பமாக
கேட்டுக் களிப்போம் ;
கண்டித்தாலும், நேசர்
ஆற்றித் தேற்றுவார் ;
நாங்கள் பின்னே செல்ல
வழி காட்டுவார்.

3. ஆட்டுக்காக மேய்ப்பர்
ரத்தம் சிந்தினார்;
அதில் மூழ்கினோரே
தூயர் ஆகுவார்;
பாவ குணம் நீக்கி
முற்றும் ரட்சிப்பார்!
திவ்விய தூய சாயல்
ஆக மாற்றுவார் .

4.இயேசு நல்ல மேய்ப்பர்
ஆட்டைப் போஷிப்பார் !
ஓநாய்கள் வந்தாலும்
தொடவே ஒட்டார் ,
சாவின் பள்ளத்தாக்கில்
அஞ்சவே மாட்டோம் ,
பாதாளத்தின் மேலும்
ஜெயங்கொள்ளுவோம்

No comments:

Post a Comment