Tuesday, December 15, 2009

.காரிருளில் என் நேச தீபமே

1.காரிருளில் என் நேச தீபமே ,
நடத்துமேன் ;
வேறொளியில்லை; வீடும் தூரமே ,
நடத்துமேன் ;
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன் :
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமேன் .

2. என் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ !
முன்னாளிலே ;
ஒத்தாசை தேடவில்லை இப்போதோ
நடத்துமே;
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்

3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் ;
இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர்
நடத்திடும் ;
உதய நேரம் வரக் கழிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்

எழுதியவர் ஜான் .H. நியூமன்

No comments:

Post a Comment