Tuesday, December 15, 2009

கர்த்தாவே யுகயுகமாய்

கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர் ;
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர் .

உம ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம் ;
உம வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம் .

பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன் .


ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே ;
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே

சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார் ;
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார் .

கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர் ;
இக்கட்டில் நற் சகயராய்
எம் நித்ய வீதாவீர்

எழுதியவர்
ஐசக் வாட்ஸ்

No comments:

Post a Comment