1.என்னோடிரும் மா நேசக் கர்த்தரே ,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே ;
மற்றோர் சகாயம் அற்ற போதிலும்,
நீங்கா ஒத்தாசை நீரே என்னோடிரும்.
2.நீர் மேல் குமிழி போல் என் ஆயுசும் ,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்
கண் கண்ட யாவும் மாறி வாடிடும் ;
மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும் .
3.நியாயம் தீர்ப்போராக என்னண்டை
வராமல் , சாந்தம் தயை கிருபை
நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்
நீர் பாவி நேசரே என்னோடிரும் .
4.நீர் கூட நின்று அருள் புரியும் ;
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
என் துணை நீர் ,என் தஞ்சமாயிரும் ;
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும் .
5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன் ;
சாவே, எங்கே என் கூரும் ஜெயமும் ?
நான் உம்மை வெல்ல நீர் என்னோடிரும் .
6.நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும் ; சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும் ;
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்