Wednesday, May 26, 2010

கர்த்தாவை நல்ல பக்தியாலே பாமாலை 322

1.கர்த்தாவை நல்ல பக்தியாலே

எப்போதும் நம்பும் நீதிமான்

எத்தீங்கிலும் அவராலே

அன்பைக் காப்பற்றப்படுவான் ;

உன்னதமான கர்த்தரை

சார்ந்தோர்க்கவர் கன்மலை .

2.அழுத்தும் கவலைகளாலே

பலன் ஏதாகிலும் உண்டோ?

நாம் நித்தம் சஞ்சலத்தினாலே

தவிப்பது உதவுமோ ?

விசாரத்தாலே நமக்கு

இக்கட்டதிகரிக்கது .

3.உன் காரியத்தை நலமாக

திருப்ப வல்லவர்க்கு

நீ அதை ஒப்புவிப்பாயாக ;

விசாரிப்பார் ,அமர்ந்திரு ,

மா திட்டமாய்த் தயாபரர்

உன் தாழ்ச்சியை அறிந்தவர் .

4.சந்தோஷிப்பிக்கிறதான

நாள் எதென்றவர் அறிவார் ;

அநேக நற்குணங்கள் காண

அந்தந்த வேளை தண்டிப்பார் ,

தீவிரமாய்த் திரும்பவும்

தெய்வன்பு பூரிப்பைத் தரும் .

4.நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்

என்றாபத்தில் நினையாதே ;

எப்போதும் பாடும் நோவுமற்றோன்

பிரிய னென்றும் எண்ணாதே ;

அநேக காரியத்துக்கு

பின் மாறுதல் உண்டாகுது .

5.கதியுள்ளோனை ஏழையாக்கி

மகா எளியவனையோ

திரவிய சம்பன்னணாக்கி

உயர்த்த ஸ்வாமிக்கரிதோ ?

தாழ்த்துவார் ,உயர்த்துவார்

அடிக்கிறார் ,அணைக்கிறார் .

7.மன்றாடி பாடி கிரிஸ்தோனாக

நடந்து கொண்டுன் வேலையை

நீ உண்மையோடே செய்வாயாக ;

அப்போ தெய்வாசீர்வாதத்தை

திரும்பக் காண்பாய் ; நீதிமான்

கர்த்தாவால் கைவிடப்படான்

No comments:

Post a Comment