Monday, November 9, 2009

உம்மைத் துதிக்கிறோம்

பாமாலை 2
1. உம்மைத் துதிக்கிறோம் ,யாவுக்கும் வல்ல பிதாவே ;
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ, ராஜாதி ராஜாவே;
உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே .

2.கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி,
எங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும்.

3. நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே
நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே.
ஏகமாய் நீர் அர்சிக்கப்படுகிறீர்.உன்னத கர்த்தரே ஆமேன்

No comments:

Post a Comment