Monday, May 31, 2010
அஞ்சாதிரு என் நெஞ்சமே பாமாலை 328
உன் கர்த்தர் துன்ப நாளிலே
கண் பார்ப்போம் என்கிறார் ;
இக்கட்டில் திகையாதிரு ,
தகுந்த துணை உனக்கு
தப்பாமல் செய்குவார்.
2. தாவீதும் யோபும் யோசேப்பும்
அநேக நீதிமான்களும்
உன்னிலும் வெகுவாய் .
கசதி அடைந்தும் ,பக்தியில்
வேரூன்றி ஏற்ற வேளையில்
வாழ்ந்தார்கள் பூர்த்தியாய் .
3.கருத்தாய் தெய்வ தயவை
எப்போ தும் நம்பும் பிள்ளையை
சகாயர் மறவார் ;
மேயபக்தி உன்னில் வேர்கொண்டால்
இரக்கமான கரத்தால்
அணைத்து பாலிப்பார் .
4.என் நெஞ்சமே ,மகிழ்ந்திரு
பேய் ,லோகம், துன்பம் உனக்கு
பொல்லாப்புச் செய்யாதே ;
இம்மானுவேல் உன் கன்மலை ,
அவர் மேல் வைத்த நம்பிக்கை
அபத்தம் ஆகாதே.
Thursday, May 27, 2010
காரிருளில் என் நேச தீபமே பாமாலை 323
வேறொளியில்லை, வீடும் தூரமே நடத்துமேன் ;
நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன்
ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன் .
2.என் இஷ்டப்படி நடந்தேன் ஐயோ !முன்னாளிலே ;
ஒத்தாசை தேடவில்லை ;இப்போதோ நடத்துமே
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன் , அன்பாக மன்னியும் .
3.இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்; இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும் ;
உதய நேரம் வர களிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்
பாதை காட்டும் மா யெகோவா பாமாலை 324
1.பாதை காட்டும் மா யெகோவா,
பரதேசியான நான்
பலவீனன், அறிவீனன் ,
இவ்வுலோகம் காடு தான்,
வானாகரம்
தந்து என்னைப் போஷியும்.
2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை
நீர் திறந்து தாருமேன் ;
தீப மேக ஸ்தம்பம் காட்டும்.
வழியில் நடத்துமேன் ;
வல்ல மீட்பர் !
என்னைத் தாங்கும், இயேசுவே.
3.சாவின் அந்தகாரம் வந்து
என்னை மூடும் நேரத்தில்
சாவின் மேலும் வெற்றித் தந்து ,
என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ;
கீத வாழ்த்தல்
உமக்கென்றும் பாடுவேன் .
Wednesday, May 26, 2010
கர்த்தாவை நல்ல பக்தியாலே பாமாலை 322
1.கர்த்தாவை நல்ல பக்தியாலே
எப்போதும் நம்பும் நீதிமான்
எத்தீங்கிலும் அவராலே
அன்பைக் காப்பற்றப்படுவான் ;
உன்னதமான கர்த்தரை
சார்ந்தோர்க்கவர் கன்மலை .
2.அழுத்தும் கவலைகளாலே
பலன் ஏதாகிலும் உண்டோ?
நாம் நித்தம் சஞ்சலத்தினாலே
தவிப்பது உதவுமோ ?
விசாரத்தாலே நமக்கு
இக்கட்டதிகரிக்கது .
3.உன் காரியத்தை நலமாக
திருப்ப வல்லவர்க்கு
நீ அதை ஒப்புவிப்பாயாக ;
விசாரிப்பார் ,அமர்ந்திரு ,
மா திட்டமாய்த் தயாபரர்
உன் தாழ்ச்சியை அறிந்தவர் .
4.சந்தோஷிப்பிக்கிறதான
நாள் எதென்றவர் அறிவார் ;
அநேக நற்குணங்கள் காண
அந்தந்த வேளை தண்டிப்பார் ,
தீவிரமாய்த் திரும்பவும்
தெய்வன்பு பூரிப்பைத் தரும் .
4.நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்
என்றாபத்தில் நினையாதே ;
எப்போதும் பாடும் நோவுமற்றோன்
பிரிய னென்றும் எண்ணாதே ;
அநேக காரியத்துக்கு
பின் மாறுதல் உண்டாகுது .
5.கதியுள்ளோனை ஏழையாக்கி
மகா எளியவனையோ
திரவிய சம்பன்னணாக்கி
உயர்த்த ஸ்வாமிக்கரிதோ ?
தாழ்த்துவார் ,உயர்த்துவார்
அடிக்கிறார் ,அணைக்கிறார் .
7.மன்றாடி பாடி கிரிஸ்தோனாக
நடந்து கொண்டுன் வேலையை
நீ உண்மையோடே செய்வாயாக ;
அப்போ தெய்வாசீர்வாதத்தை
திரும்பக் காண்பாய் ; நீதிமான்
கர்த்தாவால் கைவிடப்படான்